இந்தியா

மருத்துவப் பணியாளர்களைத் தாக்கினால் 5 ஆண்டுகள் சிறை

DIN

மருத்துவப் பணியாளர்களுக்கு எதிரான குற்றங்களுக்கு தண்டனை வழங்கும் மசோதா சனிக்கிழமை மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது.

மழைக்காலக் கூட்டத்தொடரின் 6ஆம் நாளான இன்று (சனிக்கிழமை) மாநிலங்களவையில் மருத்துவப் பணியாளர்களைத் தாக்குபவர்களுகு 5 ஆண்டு சிறைதண்டனையும், ரூ.2 லட்சம் அபராதமும் விதிக்கும் மசோதா மத்திய அரசால் நிறைவேற்றப்பட்டது.

இதனைத் தொடர்ந்து மருத்துவப் பணியாளர்களை அவமதிப்பது அல்லது தாக்குவது தண்டனைக்குரிய குற்றமாக கருதப்படும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ வர்தன் தெரிவித்தார்.

கரோனா தொற்று காலத்தில் நாட்டின் பல பகுதிகளிலும் மருத்துவர்களுக்கு எதிராக தாக்குதல்கள் குறித்த புகார்கள் எழுந்ததைத் தொடர்ந்து இந்த மசோதா நிறைவேற்றப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெங்களூரு குண்டுவெடிப்பு வழக்கு: கைதானவரை சென்னை அழைத்து வந்து என்ஐஏ விசாரணை

குரல் குளோனிங் மூலம் பண மோசடி: சைபா் குற்றப்பிரிவு எச்சரிக்கை

கோவை தொகுதி தோ்தல் முடிவை வெளியிட தடை கோரி வழக்கு

கேரளம்: 5 நிலுவை மசோதாக்களுக்கு ஆளுநா் ஒப்புதல்

ஆந்திரத்தின் நிா்வாகத் தலைநகராக விசாகப்பட்டினம்: ஒய்எஸ்ஆா் காங்கிரஸ் வாக்குறுதி

SCROLL FOR NEXT