கோப்புப்படம் 
இந்தியா

ரூ.2000 தாள்கள் அச்சிடுவது குறித்து மத்திய அரசு விளக்கம்

ரூ.2000 மதிப்பிலான ரூபாய் தாளை நிரந்தரமாக அச்சிடுவதை நிறுத்த எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது.

DIN

ரூ.2000 மதிப்பிலான ரூபாய் தாளை நிரந்தரமாக அச்சிடுவதை நிறுத்த எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது.

2019 - 20-ஆம் ஆண்டில் 2,000 ரூபாய் நோட்டுகள் அச்சிடப்படவில்லை என்றும், 2000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருந்தும் குறைந்திருப்பதாக ரிசர்வ் வங்கியின் ஆண்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

2018-ம் ஆண்டு மார்ச் மாத இறுதியில் புழஅக்கத்தில் இருந்த 2000 ரூபாய் நோட்டுகளின் எண்ணிக்கை 33,632 தாள்களாக இருந்த நிலையில், இது 2019 மார்ச் இறுதியில் 32,910 ஆகவும், 2020 மார்ச் இறுதியில் 27,398 தாள்களாகவும் குறைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இதுகுறித்து நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்டக் கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்த மத்திய நிதித்துறை இணையமைச்சர் அனுராக் தாகூர், கரோனா தொற்று காரணமாக ரூபாய் தாள்களை அச்சிடும் பணி பாதிக்கப்பட்டுள்ளது. 2000 ரூபாய் தாளைத் பொருத்த அளவில் நிரந்தரமாக அச்சிடத் தடை விதிக்கும் எந்த முடிவையும் மத்திய அரசு எடுக்கவில்லை எனத் தெரிவித்தார்.

மேலும், 2020 மார்ச் இறுதியில், நாட்டில் ஒட்டுமொத்தமாக புழக்கத்தில் இருந்த ரூபாய் நோட்டுகளில் இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகளின் விகிதம் 2.4 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. இது 2018 மார்ச் இறுதியில் 3.3 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

2029 தேர்தலிலும் மோடியே பிரதமர் வேட்பாளர்! பாஜகவின் நிலைப்பாட்டுக்கு ஆர்எஸ்எஸ் பதில் என்ன?

அதிமுக திட்டங்களை காப்பி - பேஸ்ட் செய்கிறார் Stalin: EPS | செய்திகள்: சில வரிகளில் | 15.8.25

செங்கோட்டையில் தேசியக் கொடி ஏற்றினார் பிரதமர் மோடி - புகைப்படங்கள்

தைலாபுரம் தோட்டத்துக்கு அன்புமணி ராமதாஸ் வருகை! ஏன்?

ஹுமாயூன் கல்லறை வளாகத்தில் மேற்கூரை இடிந்து 5 பேர் பலி!

SCROLL FOR NEXT