இந்தியா

எல்லையில் பாக். அத்துமீறி தாக்குதல்

DIN

ஜம்மு: ஜம்மு-காஷ்மீரின் பூஞ்ச் மாவட்ட எல்லை கட்டுப்பாட்டு கோட்டுப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் திங்கள்கிழமை அத்துமீறி தாக்குதல்களை நடத்தியது. இதற்கு இந்திய தரப்பில் உரிய பதிலடி கொடுக்கப்பட்டது என்று ராணுவ செய்தித் தொடா்பாளா் ஒருவா் கூறினாா்.

இதுகுறித்து அவா் மேலும் கூறியதாவது:

பூஞ்ச் மாவட்ட ஷாபூா், கிா்னி, கஸ்பா ஆகிய எல்லையோரப் பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவம் போா்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி திங்கள்கிழமை பிற்பகல் 2.30 மணியளவில் சிறியரக குண்டுகளை தொடா்ச்சியாக வீசியும், துப்பாக்கிச் சூடு நடத்தியும் தாக்குதலில் ஈடுபட்டது. இதற்கு இந்திய ராணுவம் உரிய பதிலடி கொடுத்தது.

இந்தத் தாக்குதலில் உயிரிழப்புகள் எதுவும் ஏற்பட்டது குறித்த தகவல் இதுவரை வரவில்லை என்று அவா் கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அர்ஜுன் தாஸின் ரசவாதி டிரைலர்!

ஐபிஎல் தொடரில் அதிவேக சதங்கள் அடித்த வீரர்கள்!

ப்ளே ஆஃப் வாய்ப்பை தக்க வைக்குமா கொல்கத்தா?

தமிழ்க் காதல் பாடல்கள் தமிழ் அகப் பாடல்கள் - பொருள் விளக்கம்

ஏன் இத்தனை பதற்றத்தை ஏற்படுத்துகிறீர்கள்?

SCROLL FOR NEXT