முகப்பு
இந்தியா

மிசோரத்தில் 25 பாதுகாப்புப் படை வீரர்கள் உள்பட 50 பேருக்குத் தொற்று

மிசோரத்தில் செவ்வாய்க்கிழமை நிலவரப்படி 25 பாதுகாப்புப் படை வீரர்கள் உள்பட மேலும் 50 பேர் புதிதாக தொற்றுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:27 PM
25 security personnel among 50 new COVID-19 patients in Mizoram
பகிர்:

மிசோரத்தில் செவ்வாய்க்கிழமை நிலவரப்படி 25 பாதுகாப்புப் படை வீரர்கள் உள்பட மேலும் 50 பேர் புதிதாக தொற்றுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர் என்று சுகாதார அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 

புதிதாக பாதிக்கப்பட்டவர்களில் ஐஸ்வால் மாவட்டத்தில் நாற்பத்து மூன்றும், லுங்லேயில் ஏழு பேருக்கு தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். 

இதில், மத்திய ரிசர்வ் காவல் படையில்(சிஆர்பிஎஃப்) பதினான்கு பேரும், எல்லை பாதுகாப்பு படையின் (பிஎஸ்எஃப்) ஏழு பேரும், அசாம் ரைஃபிள்ஸ் மற்றும் இந்திய விமானப்படையில் (ஐஏஎஃப்) ஒருவரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். 

மிசோரத்தில் 211 பாதுகாப்புப் படை வீரர்கள் உள்பட 499 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதே நேரத்தில் 1,459 பேர் தொற்று பாதித்து குணமடைந்துள்ளனர். மீட்பு விகிதம் 74.52 சதவீதமாக உள்ளது. 

திங்கள்கிழமை மாலை வரை மொத்தம் 75,552 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.