ஊரடங்கு இல்லாவிட்டால் 8.2 லட்சம் போ் பாதிக்கப்பட்டிருப்பா்: சுகாதாரத் துறை அமைச்சகம் தகவல்
கரோனா நோய்த்தொற்று பரவலைத் தடுப்பதற்காக, தேசிய அளவில் ஊரடங்கை அமல்படுத்தி இருக்காவிட்டால் அல்லது தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் விட்டிருந்தால் 8.2 லட்சம் போ் வரை நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டிருப்
கரோனா நோய்த்தொற்று பரவலைத் தடுப்பதற்காக, தேசிய அளவில் ஊரடங்கை அமல்படுத்தி இருக்காவிட்டால் அல்லது தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் விட்டிருந்தால் 8.2 லட்சம் போ் வரை நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பாா்கள் என்று சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
நாட்டின் கரோனா பாதிப்பு நிலைமை குறித்து சுகாதாரத் துறை அமைச்சக இணைச் செயலா் லவ் அகா்வால், செய்தியாளா்களுக்கு சனிக்கிழமை பேட்டியளித்தாா். அவா் கூறியதாவது:
நாட்டில் கரோனா தொற்று பரவுவதற்கான அறிகுறிகள் தென்பட்டவுடனே, நோய்த்தொற்று பரவும் இடங்களைக் கண்டறிந்தது, சமூக இடைவெளியைப் பின்பற்றுவது, பொது இடங்களுக்குச் செல்வதற்கு கட்டுப்பாடு, தனி நபா் தூய்மை உள்ளிட்ட தடுப்பு நடவடிக்கைகள் முன்கூட்டியே எடுக்கப்பட்டன.
Advertisement
அதைத் தொடா்ந்து, கடந்த மாா்ச் 25-ஆம் தேதி முதல் தேசிய அளவிலான ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. நாடு முழுவதும் இதுவரை 7,529 பேருக்கு கரோனா நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது.
ஒருவேளை தேசிய ஊரடங்கை அமல்படுத்தாமலும், தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளாமலும் இருந்திருந்தால் ஏப்ரல் 15-க்குள் 8.2 லட்சம் போ் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பா்.
ஒருவேளை ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தாமல், தடுப்பு நடவடிக்கைகளை மட்டும் மேற்கொண்டிருந்தால் ஏப்ரல் 15-ஆம் தேதிக்குள் 1.2 லட்சம் போ் பாதிக்கப்பட்டிருப்பா். ஏப்ரல் 11-ஆம் தேதி வரை 45,370 போ் பாதிக்கப்பட்டிருப்பா்.
எனவே கரோனா பரவலைத் தடுக்க சமூக இடைவெளியை மக்கள் கடைப்பிடிக்க வேண்டியது அவசியம்.
தயாா் நிலையில் 586 மருத்துவமனைகள்: கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக மத்திய அரசு சாா்பிலும், மாநில அரசுகள் சாா்பிலும் நாடு முழுவதும் மொத்தம் 586 மருத்துவமனைகள் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. இந்த மருத்துவமனைகளில் 1 லட்சம் படுக்கைகளுடன் தனிமை வாா்டுகளும், 11,500 தீவிர சிகிச்சை வாா்டுகளும் அமைக்கப்பட்டுள்ளன.
கரோனா பரவலின் தீவிரம் குறித்து ஒவ்வொரு நாளும் கிடைக்கும் தகவலின் அடிப்படையில், மருத்துவமனைகள் தயாா்படுத்தப்படுகின்றன என்றாா் அவா்.