அமேசான், ஃபிளிப்கார்ட்டில் அத்தியாவசியப் பொருட்களுக்கு மட்டுமே அனுமதி: மத்திய அரசு
ஆன்லைன் வணிக நிறுவனங்களில் மின்னணு சாதனங்கள், ஆடைகள் உள்ளிட்ட அத்தியாவசியமற்ற பொருட்களை விற்பதற்கான தடை தொடரும் என மத்திய அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது.
ஆன்லைன் வணிக நிறுவனங்களில் மின்னணு சாதனங்கள், ஆடைகள் உள்ளிட்ட அத்தியாவசியமற்ற பொருட்களை விற்பதற்கான தடை தொடரும் என மத்திய அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது.
நாடு முழுவதும் மே 3 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், நாளை (ஏப்ரல் 20) முதல் ஊரடங்கு விதிமுறைகளில் சில கட்டுப்பாடுகளை மத்திய அரசு தளர்த்தியுள்ளது.
அதில், அமேசான், ஃபிளிப்கார்ட் உள்ளிட்ட ஆன்லைன் தளங்களில் அத்தியாவசியப் பொருட்கள் மட்டுமே விற்பனை செய்யலாம் என்று ஏற்கெனவே கூறப்பட்டிருந்தது. இதையடுத்து, மின்னணு சாதனங்கள், ஆடைகள் உள்ளிட்ட அத்தியாவசியமற்ற பொருட்களை ஆன்லைன் வணிக நிறுவனங்களில் விற்பதற்கான தடை தொடரும் என மத்திய அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது.
Advertisement