முகப்பு
இந்தியா

தனிமைப்படுத்திக் கொண்ட பாஜக எம்பி சுரேஷ் பிரபு

கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பாஜக எம்பி சுரேஷ் பிரபு தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.

Updated On : 18 மார்ச், 2020 at 10:30 AM
பகிர்:

கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பாஜக எம்பி சுரேஷ் பிரபு தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.

கடந்த 10ஆம் தேதி சவூதி அரேபியாவில் நடந்த இரண்டாவது ஷெர்பாஸ் கூட்டத்தில் பாஜக எம்பி சுரேஷ் பிரபு உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதைத்தொடர்ந்து இந்தியா திரும்பிய அவர் கரோனா பரிசோதனை மேற்கொண்டார். பரிசோதனையில் அவருக்கு கரோனா பாதிப்பு இல்லை என உறுதியானது. 

எனினும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அடுத்த 14 நாட்களுக்கு தனது இல்லத்தில் தனிமையில் இருக்கப் போவதாக அவர் தெரிவித்துள்ளார். ஏற்கெனவே தனிமைப்படுத்திக் கொண்ட மத்திய அமைச்சர் முரளிதரனுக்கு கரோனா பாதிப்பு இல்லை என்பது நேற்று உறுதியானது குறிப்பிடத்தக்கது. 

Advertisement

உலகம் முழுவதும் அச்சுறுத்தி வரும் கரோனாவுக்கு இந்தியாவில் இதுவரை 147 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.