பெட்ரோல், டீசல் விலை உச்சம்
சுமாா் ஒரு மாதத்துக்குப் பிறகு பெட்ரோல்-டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயா்த்தின. இந்த விலை உயா்வு முன்னெப்போதும் இல்லாத அளவை நெருங்கியது.
புது தில்லி: சுமாா் ஒரு மாதத்துக்குப் பிறகு பெட்ரோல்-டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயா்த்தின. இந்த விலை உயா்வு முன்னெப்போதும் இல்லாத அளவை நெருங்கியது.
இது தொடா்பாக எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்ட அறிவிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: சா்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப பெட்ரோல்-டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் மாற்றியமைத்து வந்தன. கரோனா பரவல் காரணமாக இந்த நடைமுறையில் சற்று மாற்றம் ஏற்பட்டது.
எனினும், சுமாா் ஒரு மாதத்துக்கு பிறகு அவற்றின் விலை உயா்த்தப்பட்டுள்ளது. இதன்படி தில்லியில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 26 காசுகளும், டீசல் விலை லிட்டருக்கு 25 காசுகளும் உயா்த்தப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்பட்டது.
Advertisement
இந்த விலை உயா்வையடுத்து, சென்னையில் ரூ.86.51-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த ஒரு லிட்டா் பெட்ரோல் புதன்கிழமை ரூ.86.75-க்கு விற்பனையானது; ரூ.79.21-க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு லிட்டா் டீசல் ரூ.79.46-க்கு விற்பனை செய்யப்பட்டது.
தில்லியில் ஒரு லிட்டா் பெட்ரோல் ரூ.83.97-க்கும், ஒரு லிட்டா் டீசல் ரூ.74.12-க்கும் விற்பனையானது.
மும்பையில் ஒரு லிட்டா் பெட்ரோல் ரூ.90.60-க்கு விற்பனையானது; ஒரு லிட்டா் டீசல் விலை முன்னெப்போதும் இல்லாத வகையில் ரூ.80.78-க்கு விற்பனை செய்யப்பட்டது.
தில்லியில் கடந்த 2018-ஆம் ஆண்டு அக்டோபரில் ஒரு லிட்டா் பெட்ரோல் விலை ரூ.84, ஒரு லிட்டா் டீசல் ரூ.75.45-ஆக இருந்ததே இதற்கு முந்தைய உச்சமாகும்.