தில்லியில் புதிதாக 3,548 பேருக்கு கரோனா
தில்லியில் புதிதாக 3,548 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டது.
தில்லியில் புதிதாக 3,548 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டது.
மேலும் 2,936 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 15 பேர் பலியாகியுள்ளனர்.
இதைத் தொடர்ந்து, தில்லியில் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 6,79,962 ஆக உயர்ந்துள்ளது. இதில் 6,54,277 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். 11,096 பேர் பலியாகியுள்ளனர்.
Advertisement
இன்றைய தேதியில் 14,589 பேர் இன்னும் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தில்லியில் இன்று மட்டும் 64,003 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இதில் தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்படுவோர் விகிதம் 5.54 சதவிகிதமாக உள்ளது.