மகாராஷ்டிரத்தில் புதிதாக 47,288 பேருக்கு கரோனா
மகாராஷ்டிரத்தில் புதிதாக 47,288 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டது.
மகாராஷ்டிரத்தில் புதிதாக 47,288 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டது.
மகாராஷ்டிர கரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய தரவுகள் வெளியாகியுள்ளன. புதிதாக 47,288 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 30,57,885 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் 26,252 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 155 பேர் நோய்த் தொற்றுக்கு பலியாகினர்.
Advertisement
இதுவரை மொத்தம் 25,49,075 பேர் குணமடைந்துள்ளனர். 56,033 பேர் நோய்த் தொற்றுக்கு பலியாகியுள்ளனர்.
இன்றைய நிலவரப்படி 4,51,375 பேர் இன்னும் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர்.