உ.பி.யில் புதிதாக 3,999 பேருக்கு கரோனா: 13 பேர் பலி
உத்தரப் பிரதேசத்தில் ஒரேநாளில் புதிதாக 3,999 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து மொத்த பாதிப்பு 6,34,033 ஆக அதிகரித்துள்ளது.
உத்தரப் பிரதேசத்தில் ஒரேநாளில் புதிதாக 3,999 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து மொத்த பாதிப்பு 6,34,033 ஆக அதிகரித்துள்ளது.
இதுதொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலில்,
கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 13 பேர் பலியாகியுள்ள நிலையில், மொத்த உயிரிழப்பு 8,894 ஆகப் பதிவாகியுள்ளது.
மேலும் தற்போது 22,820 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகக் கூடுதல் சுகாதார துணை செயலாளர் அமித் மோகன் பிரசாத் தெரிவித்துள்ளார்.
மொத்தம் இதுவரை 6,02,319 பேர் இதுவரை நோயிலிருந்து குணமடைந்துள்ளனர். மேலும் மாநிலத்தில் இதுவரை 3.55 கோடி பரிசோதனைகள் மேற்கொண்டுள்ளன.