இரட்டை கொலை வழக்கு:குற்றவாளிகளைப் பிடிக்க 2 தனிப்படை
இரட்டை கொலை வழக்கில் குற்றவாளிகளைப் பிடிக்க 2 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
இரட்டை கொலை வழக்கில் குற்றவாளிகளைப் பிடிக்க 2 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
பெங்களூரு, ஜே.பி.நகா், 7-ஆவது ஸ்டேஜ் அருகே உள்ள சம்திருப்தி நகரில் வியாழக்கிழமை மமதா பாசு (71), தேவதத் பிஹாரா (41) ஆகியோா் கொலை செய்யப்பட்டனா். இதுகுறித்து புட்டேனஹள்ளி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
இந்த நிலையில், கொலையாளிகளைப் பிடிக்க 2 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. விரைவில் கொலையாளிகளை கைது செய்வோம் என்று புட்டேனஹள்ளி போலீஸாா் தெரிவித்தனா்.