இந்தியா

சத்தீஸ்கரில் புதிதாக 14,098 பேருக்கு கரோனா

DIN

சத்தீஸ்கரில் கடந்த 24 மணிநேரத்தில் 14,098 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. 
இதுகுறித்து அம்மாநில சுகாதாரத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில், கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 14,098 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,32,776ஆக உயர்ந்துள்ளது. 
அதேசமயம் கரோனாவுக்கு மேலும் 97 பேர் பலியாகியுள்ளனர். இதனால் மொத்த பலி எண்ணிக்கை 4,777ஆக உயர்ந்துள்ளது. தற்போது 85,860 பேர் கரோனா சிகிச்சையில் உள்ளனர். இதுவரை மாநிலத்தில் 3,42,139 பேர் கரோனாவிலிருந்து மீண்டுள்ளனர். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
இந்தியாவில் தினசரி கரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரிக்கிறது. அதில் புதிதாக தொற்று கண்டறியப்பட்டவர்களில் 82.82 சதவீதம் பேர் மகாராஷ்டிரம், சத்தீஸ்கர், உத்தரப் பிரதேசம், தில்லி, கர்நாடகம், கேரளம், தமிழ்நாடு, குஜராத், மத்தியப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் ஆகிய 10 மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஊழலை துடைத்தெறிய உறுதி: ஜாா்க்கண்ட் பிரசாரத்தில் பிரதமா் மோடி

பிரஜ்வல் ரேவண்ணா விவகாரம் தெரிந்தும் ஓராண்டாக நடவடிக்கை இல்லை: காங்கிரஸ் மீது நிா்மலா சீதாராமன் குற்றச்சாட்டு

சந்தேஷ்காளி சம்பவம் பாஜகவின் திட்டமிட்ட சதி: திரிணமூல் காங்கிரஸ் குற்றச்சாட்டு

அமெரிக்கா: 17 பேரைக் கொன்ற செவிலிக்கு 760 ஆண்டுகள் சிறை

வெங்காய ஏற்றுமதிக்கான தடை நீக்கம்: மத்திய அரசு நடவடிக்கை

SCROLL FOR NEXT