உ.பி.யில் பாஜக கவுன்சிலர் காரில் இருந்து சடலமாக மீட்பு
உ.பி.யில் பாஜக கவுன்சிலர் காரில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார்.
இந்தியாஉ.பி.யில் பாஜக கவுன்சிலர் காரில் இருந்து சடலமாக மீட்பு
உ.பி.யில் பாஜக கவுன்சிலர் காரில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார்.
உ.பி.யில் பாஜக கவுன்சிலர் காரில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார்.
உ.பி. மாநிலத்தைச் சேர்ந்தவர் மணீஷ் சௌத்ரி(38). பாஜக கவுன்சிலரான இவர் நேற்று தனது காரில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார்.
மேலும் அவரது காரில் இருந்து கைத்துப்பாக்கி, மதுபானப் பாட்டில் உள்ளிட்டவற்றையும் காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.
இதையடுத்து அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து மணீஷ் சௌத்ரியின் உறவினர்கள் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
புகார் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பாஜக கவுன்சிலர் தற்கொலை செய்துகொண்டதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் மணீஷ் சௌத்ரி கொலை செய்யப்பட்டிருப்பதாக அவரது உறவினர்கள் கூறி வருவது குறிப்பிடத்தக்கது.