FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

ம.பி.யில் ரூ.25 லட்சம் கரோனா நிதியுதவியளித்த காங். எல்எல்ஏ.க்கள்

மத்தியப் பிரதேச மாநிலத்தில், காங்கிரஸ் எம்எல்ஏ.க்கள் இருவர் கரோனா நிதியுதவியாக ரூ.25 லட்சம் வழங்கியுள்ளனர். 

Updated On : 16 ஏப்ரல் 2021, 6:11 pm IST
பகிர்:

மத்தியப் பிரதேச மாநிலத்தில், காங்கிரஸ் எம்எல்ஏ.க்கள் இருவர் கரோனா நிதியுதவியாக ரூ.25 லட்சம் வழங்கியுள்ளனர். 

முன்னாள் மாநில அமைச்சராகவும், போபால் தென்மேற்கு எம்எல்ஏ.வாக இருந்த சர்மா மற்றும் காஸ்ராவாட்டைச் சேர்ந்த எம்எல்ஏ யாதவ் ஆகிய இருவரும் கரோனா தொற்றுக்கு நிவாரண நிதி அளித்துள்ளனர். 

யாதவ் காஸ்ராவாட்டில் உள்ள சமூக சுகாதார மையத்திற்கு ரூ.10 லட்சமும், கார்கோனில் உள்ள மாவட்ட மருத்துவமனைக்கு ரூ.5 லட்சமும் வழங்கினார். மேலும் சர்மா உள்ளூர் மருத்துவ உள்கட்டமைப்புக்கு ரூ.10 லட்சம் நிவாரணமாக வழங்கியுள்ளார். 

Advertisement

Advertisement

இதற்கு, காங்கிரஸ் மூத்த தலைவரும், மாநிலங்களவை எம்பி.யுமான திக்விஜயா சிங் எம்எல்ஏ.,க்கள் இருவரையும் வெகுவாக பாராட்டினார். மேலும், கரோனா நிவாரண நிதியளிக்க எம்.எல்.ஏ.க்கள் முன்வரவேண்டும் என்று அவர் வேண்டுகோள் விடுத்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments