கேரளத்தில் 13 ஆயிரத்தைத் தாண்டிய கரோனா பாதிப்பு
கேரளத்தில் புதிதாக 13,644 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
கேரளத்தில் புதிதாக 13,644 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இன்றைய (ஏப்.19) கரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய தரவுகளை கேரள சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.
அதில், கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 13,644 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
கரோனாவால் பாதிக்கப்பட்டு 1,03,004 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த 24 மணிநேரத்தில் கரோனா தொற்றிலிருந்து 4,305 பேர் குணமடைந்ததால், மொத்தமாக குணமடைந்தோர் எண்ணிக்கை 11,44,791-ஆக உயர்ந்துள்ளது.
புதிதாக 21 பேர் உயிரிழந்ததால், இதுவரை மொத்தமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 4,929-ஆக அதிகரித்துள்ளது என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.