மகாராஷ்டிரத்துக்கு 6 மாநிலங்களிலிருந்து வருவோருக்கு கட்டுப்பாடுகள் 
இந்தியா

6 மாநிலங்களிலிருந்து மகாராஷ்டிரம் வருவோருக்கு கட்டுப்பாடுகள்

கரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த போராடி வரும் மகாராஷ்டிரம், கரோனா தொற்று அதிகமாக இருக்கும் 6 மாநிலங்களிலிருந்து வருவோருக்கு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

PTI


மும்பை: கரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த போராடி வரும் மகாராஷ்டிரம், கரோனா தொற்று அதிகமாக இருக்கும் 6 மாநிலங்களிலிருந்து வருவோருக்கு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

மகாராஷ்டிர தலைமைச் செயலாளர் வெளியிட்ட அறிக்கையில், கேரளம், கோவா, குஜராத், தில்லி மற்றும் என்சிஆர், ராஜஸ்தான், உத்தரகண்ட் ஆகிய மாநிலங்கள் கரோனா தொற்று அபாயம் அதிகமுள்ள மாநிலங்களாக கண்டறியப்பட்டுள்ளன.

எனவே, இந்த மாநிலங்களிலிருந்து மகாராஷ்டிரம் வரும் பயணிகள் கட்டாயம் ஆர்டி-பிசிஆர் பரிசோதனையில் கரோனா இல்லை என்பதை உறுதி செய்ய வேண்டியது அவசியம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மாநிலங்களில், உருமாறிய அதிதீவிர கரோனா பரவல் அதிகமிருப்பதால், அந்த தொற்று மகாராஷ்டிர மாநிலத்துக்குள் பரவாமல் தடுக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

அடுத்த உத்தரவு வரும் வரை இந்தக் கட்டுப்பாடு நடைமுறையில் இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

"அனைவருக்கும் ஸ்டார்ட்அப்' மையம் சென்னை ஐஐடி-யில் தொடக்கம்

வாக்குச்சாவடி நிலைய அலுவலா் 2-க்கான ஆலோசனைக் கூட்டம்

பால் பண்ணை தொழில் முனைவோருக்கு ஒரு மாத திறன் மேம்பாட்டுப் பயிற்சி இன்று தொடக்கம்

இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை

வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி தொடக்கம்: வீடு வீடாகச் சென்று படிவங்கள் அளிப்பு

SCROLL FOR NEXT