முகப்பு
இந்தியா

கரோனா 2-ம் அலைக்கு பிரதமரின் அலட்சியமே காரணம்: மம்தா

நாடு முழுவதும் கரோனா இரண்டாம் அலை பரவி வருவதற்கு பிரதமர் நரேந்திர மோடியின் அலட்சியமே காரணம் என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியுள்ளார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:02 PM
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி (கோப்புப்படம்)
பகிர்:

நாடு முழுவதும் கரோனா இரண்டாம் அலை பரவி வருவதற்கு பிரதமர் நரேந்திர மோடியின் அலட்சியமே காரணம் என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியுள்ளார்.

மேற்கு வங்க மாநிலம் நடியா மாவட்டத்திலுள்ள கலிகனி பகுதியில் பொதுமக்கள் மத்தியில் மம்தா பேசியதாவது, 

நாடு முழுவதும் ஒரு வருடத்திற்கும் மேலாக கரோனா உள்ளது. கடந்த ஆறு மாதங்களாக கரோனா தொற்றைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளாதது ஏன். இதற்கு பிரதமர் விளக்கமளிக்க வேண்டும்.

கரோனா இரண்டாம் அலை பரவுவதற்கு நரேந்திர மோடியே காரணம். தகுந்த நேரத்தில் உரிய நடவடிக்கைகளை முழுமையாக மேற்கொண்டிருந்தால், தற்போது இரண்டாம் முறையாக கரோனா பரவும் நிலை ஏற்பட்டிருக்காது என்று கூறினார்.

முழு கட்டுரையைப் படிக்க →