மேற்கு வங்கத்தின் தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள ஒரு தொழிற்சாலையில் இன்று காலை ஏற்பட்ட குண்டுவெடிப்பில் 11 பேர் காயமடைந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
கொல்கத்தாவிலிருந்து 20 கி.மீ தூரத்தில் உள்ள பங்கூர் காவல் நிலைய பகுதியில் உள்ள மலாஞ்சா-பத்மபுகூரில் ஒரு சட்டவிரோத தோல் தொழிற்சாலையில் இன்று காலை 7.30 மணிக்கு இந்த வெடி விபத்து சம்பவம் நிகழ்ந்துள்ளது.
காயமடைந்தவர்களில் 3 பேர் மிகவும் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மற்றவர்கள் மாவட்டத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து தொழிற்சாலை சீல் வைக்கப்பட்டுள்ளது. குண்டுவெடிப்புக்கான சரியான காரணத்தை அறிய மேலும் அப்பகுதியில் அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருகின்றனர்.