கேரளத்தில் புதிதாக 21,890 பேருக்கு கரோனா
கேரளத்தில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 21,890 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. மேலும் புதிதாக 28 பேர் உயிரிழந்தனர்.
கேரளத்தில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 21,890 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. மேலும் புதிதாக 28 பேர் உயிரிழந்தனர்.
கரோனாவால் இன்று (திங்கள் கிழமை) பாதிக்கப்பட்டோரின் பட்டியல் அடங்கிய அறிக்கையினை கேரள சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது.
இதில் புதிதாக 21,890 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கரோனாவால் பாதிக்கப்பட்டு 2,32,812 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கரோனாவால் பாதிக்கப்பட்டு புதிதாக 28 பேர் உயிரிழந்ததால், இதுவரை மொத்தமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 5,136-ஆக அதிகரித்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.