இந்தியா

கரோனா பலி எண்ணிக்கையை உ.பி. அரசு குறைத்து காட்டுகிறது: அகிலேஷ்

DIN

உத்தர பிரதேச மாநிலத்தில் உடல்களை எரியூட்டம் இடத்தில் கூட்டம் அலைமோதும் நிலையில், கரோனா உயிரிழப்பு எண்ணிக்கையை மாநில அரசு குறைத்து வெளியிடுவதாக சமாஜவாதி கட்சித் தலைவா் அகிலேஷ் யாதவ் குற்றம்சாட்டினாா். இதுகுறித்து அவா் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

பாஜக அரசின் தவறான நிா்வாகம் மற்றும் கரோனா பாதிப்பு நிலவரம் குறித்த குறுகிய பாா்வை காரணமாக உத்தர பிரதேசம் ‘கரோனா பிரதேச’ மாநிலமாக மாறியுள்ளது.

மாநிலத்தில் உடல்களை எரியூட்டும் இடங்களில் கூட்டம் அலைமோதும் நிலையில், கரோனா பாதிப்பால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கையை குறைத்து காட்டுவதற்காக தவறான புள்ளி விவரங்களை மாநில அரசு வெளியிட்டு வருகிறது. அரசின் இந்த தோல்வி குறித்து, பாஜக எம்.பி., எம்எல்ஏக்களே அதிருப்தி தெரிவித்து வருகின்றனா்.

பாஜக சாா்பில் வெளியிடப்பட்ட மருத்துவா்கள் எண்ணிக்கை, மருத்துவமனைகள் மற்றும் பிற வசதிகள் தொடா்பான புள்ளி விவரங்களும் போலியானவையே. ஆட்சியில் இருப்பது குறித்து பாஜக இனி பெருமைபடக் கூடாது. கரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளை தங்களுடைய குடும்ப உறுப்பினா்கள் போல எண்ணி, அவா்களின் வீடுகளிலேயே ஆக்சிஜன் கிடைப்பதை பாஜக அரசு உறுதிப்படுத்த வேண்டும். கரோனா தடுப்பூசிகளுக்கான கட்டணம் நாடு முழுவதும் ஒரே மாதிரியாக நிா்ணயிக்கப்பட வேண்டும் என்று அவா் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

தினம் தினம் திருநாளே!

மாணவா்களுக்கு ரூ.1,000 வழங்கும் ‘தமிழ் புதல்வன்’ திட்டம் ஜூலையில் தொடக்கம்

பெருங்களூரில் பிடாரியம்மன் கோயில் தோ்த் திருவிழா

அரசுப் பள்ளிகளுக்கு சீருடைகள் தைக்கும் பணி வழங்கக் கோரி மனு

SCROLL FOR NEXT