இந்தியா

ஆசிரியர்களை கரோனா தடுப்பு பணிகளில் ஈடுபடுத்த இமாச்சல் அரசு முடிவு

DIN

ஆசிரியர்கள் உள்ளிட்ட பள்ளிக்கல்வித் துறை ஊழியர்களை கரோனா தடுப்பு பணிகளில் ஈடுபடுத்த இமாச்சல் பிரதேச அரசு முடிவெடுத்துள்ளது.

நாடு முழுவதும் அதிகரித்துவரும் கரோனா தொற்று பரவலின் காரணமாக பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 

இந்நிலையில் இமாச்சல் மாநில அரசு செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் ஆசிரியர்கள் உள்ளிட்ட பள்ளிக்கல்வித் துறை ஊழியர்களை கரோனா தொற்று தடுப்பு பணிகளில் ஈடுபடுத்தப்படுவர் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதுதொடர்பாக உயர்கல்வி, தொடக்கக் கல்வி மற்றும் அனைவருக்கும் கல்வித்திட்ட இயக்குனரகத்திற்கு மாநில அரசு சுற்றறிக்கை மூலம் உத்தரவிட்டுள்ளது. 

இமாச்சலில் இதுவரை 89 ஆயிரத்து 193 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குகேஷுக்கு ரூ.75 லட்சம் ஊக்கத்தொகை வழங்கினார் முதல்வர்

வெங்கடேஷ் பட்டின் புதிய சமையல் நிகழ்ச்சி அறிவிப்பு!

ஐஸ்வர்யம்..!

மணிப்பூரில் 6 வாக்குச்சாவடிகளில் ஏப்.30ல் மறு வாக்குப் பதிவு

மஞ்ஞுமல் பாய்ஸ் ஓடிடி தேதி!

SCROLL FOR NEXT