முகப்பு
இந்தியா

இமாசலில் தீ விபத்து: பெண் பலி, 6 வீடுகள் தீயில் எரிந்து நாசம்

இமாசல பிரதேசத்தின் சிம்லா மாவட்டத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் ஆறு வீடுகள் தீயில் எரிந்து நாசமானது. ஒரு பெண் பலியாகியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

Updated On : 28 ஏப்ரல், 2021 at 11:57 AM
இமாசலில் தீ விபத்து: பெண் பலி, 6 வீடுகள் தீயில் எரிந்து நாசம்
பகிர்:

இமாசல பிரதேசத்தின் சிம்லா மாவட்டத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் ஆறு வீடுகள் தீயில் எரிந்து நாசமானது. ஒரு பெண் பலியாகியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

சிம்லா மாவட்டத்தில் உள்ள கொட்காய் பகுதியில் உள்ள ஃபனெல் கிராமத்தில் உள்ள ஒரு வீட்டில் தீ விபத்து ஏற்பட்ட நிலையில், தீ மளமளவென அருகில் உள்ள 6 வீடுகளுக்குப் பரவியது. இதில் பிம்லா தேவி என்பவர் தீயில் கருகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 

தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் கூடுதல் காவல்துறை ஆய்வாளர் பர்வீர் தாக்கூர் தெரிவித்தார். 
 

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.