இந்தியா

2ஆவது டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொண்டார் தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால்

DIN

தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் கரோனா தடுப்பூசிக்கான இரண்டாவது டோஸை இன்று செலுத்திக்கொண்டார். 
முன்னதாக அவர் தனது முதல் டோஸை எல்என்ஜேபி மருத்துவமனையில் கடந்த மார்ச் மாதம் 4ஆம் தேதி செலுத்திக்கொண்டார். அதன் தொடர்ச்சியாக இன்று இரண்டாவது டோஸை செலுத்திக்கொண்டார். 
இதுகுறித்து அவர் தனது சுட்டுரையில், "நான் இன்று எனது இரண்டாவது டோஸ் தடுப்பூசியை எடுத்துக்கொண்டேன். தகுதியுள்ள அனைவரும் தடுப்பூசி போடுமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார். 
இந்தியாவில் வருகிற மே மாதம் 1-ஆம் தேதியிலிருந்து 18 வயதுக்கு மேலான அனைவருக்கும் தடுப்பூசி போடும் பணிகள் தொடங்க உள்ளன. இதற்காக 1.34 கோடி கரோனா தடுப்பூசிகள் வாங்க தில்லி அரசு ஒப்புதல் அளித்தது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘நாட்டின் மகள்கள் தோற்றனர். பிரிஜ் பூஷண் வெற்றி’ : சாக்‌ஷி மாலிக் உருக்கம்!

பப்பியோடு விளையாடு! ஹன்சிகா...

ஹனி கேக்..!

ஹாட் ஸ்பாட் ஓடிடியில் எப்போது?

டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி தேர்வு செய்யப்பட்டது எப்படி? ரோஹித் சர்மா விரிவான பதில்!

SCROLL FOR NEXT