இந்தியா

அம்பாலா கூர்நோக்கு இல்லத்தில் 31 சிறார்களுக்கு கரோனா

DIN

அம்பாலாவில் உள்ள கூர்நோக்கு இல்லத்தில் 31 சிறார்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

ஹரியாணா மாநிலம், அம்பாலாவில் உள்ள கூர்நோக்கு இல்லத்தில் 71 சிறார்கள் தங்கியுள்ளனர். இச்சிறுவர்களில் பலருக்கு கரோனா அறிகுறி தென்படவே அவர்களுக்கு புதன்கிழமை கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. 

அவற்றின் முடிவுகள் இன்று கிடைத்துள்ள நிலையில் அதில் 31 சிறார்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து கரோனா தொற்று உறுதியான சிறுவர்கள் அனைவரும் உடனடியாக தனிமைப்படுத்தப்பட்டனர். 

மேலும் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கு தேவையான மருத்துவ வசதிகளையும் சுகாதார அதிகாரிகள் ஏற்பாடு செய்துள்ளனர். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழைக்கு வாய்ப்பு!

இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்கள்: 3-வது இடத்தில் பரமத்தி..!

பள்ளிகளில் தொலைபேசி பயன்பாட்டுக்கு தடை: அமைச்சர் மதன் திலாவர்

சாராயம் காய்ச்சுவோா் மீது கடும் நடவடிக்கை: திருப்பத்தூா் எஸ்.பி. எச்சரிக்கை

மும்பைக்கு 174 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஹைதராபாத்!

SCROLL FOR NEXT