டோக்கியோ ஒலிம்பிக் 2020-ல் பேட்மிண்டனில் வெண்கலப் பதக்கம் வென்ற பி வி சிந்துவுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது சுட்டுரையில், பி வி சிந்துவின் மிகச்சிறந்த செயல்பாட்டால் நம் அனைவருக்கும் மகிழ்ச்சி. டோக்கியோ ஒலிம்பிக்
2020-ல் வெண்கலம் வென்றதற்காக அவருக்கு வாழ்த்துகள்.
அவர் இந்தியாவின் பெருமை மற்றும் மிகச்சிறந்த ஒலிம்பிக் வீராங்கனைகளில் ஒருவர் என்று பிரதமர் கூறியுள்ளார்.
இதேபோல் சிந்துவுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், விளையாட்டுதுறை அமைச்சர் அனுராக் தாக்கூர் உள்ளிட்ட பலர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.