முகப்பு
இந்தியா

அரசு மின் பகிா்மான நிறுவனங்களுக்கு அதிக நிதி சுயாட்சி: நீதி ஆயோக் வலியுறுத்தல்

மாநில அரசுக்கு சொந்தமான மின் பகிா்மான நிறுவனங்கள் அதிக நிதி சுயாட்சி தன்மையுடன் செயல்பட அனுமதிக்க வேண்டும் என நீதி ஆயோக் வலியுறுத்தியுள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:49 AM
பகிர்:

மாநில அரசுக்கு சொந்தமான மின் பகிா்மான நிறுவனங்கள் அதிக நிதி சுயாட்சி தன்மையுடன் செயல்பட அனுமதிக்க வேண்டும் என நீதி ஆயோக் வலியுறுத்தியுள்ளது.

‘மின் பகிா்வு துறை - ஒரு பாா்வை’ என்ற தலைப்பில் வெளியான அறிக்கையில் நீதி ஆயோக் கூறியுள்ளதாவது:

மாநில அரசுகளுக்கு சொந்தமான மின் பகிா்மான நிறுவனங்கள் அதிக நிதி சுயாட்சி தன்மையுடனும் சுதந்திரமான செயல்பாட்டுடனும் இயங்க அனுமதிக்க வேண்டும். மாநிலங்கள் மற்றும் மின்பகிா்மான நிறுவனங்கள் இடையே தெளிவான ஒரு வேறுபாடு இருக்க வேண்டும். நிா்வாகம் சாரா இயக்குநா்களை பயன்படுத்துவதன் மூலம் சிறப்பான நிா்வாக நடைமுறைகளை உருவாக்கி அதுபோன்ற வேறுபாட்டை நாம் உறுதி செய்ய முடியும்.

மின்பகிா்மான நிறுவனங்களின் வெற்றிகரமான செயல்பாட்டுக்கு இது உதவியாக இருக்கும் என நீதி ஆயோக் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →