இந்தியா

'கரோனாவுக்கு சிகிச்சைப் பெறுவோரில் தமிழகம் 5-வது இடம்'

நாட்டில் கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவோரில் தமிழகம் 5-வது இடத்தில் உள்ளதாக மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

DIN

நாட்டில் கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவோரில் தமிழகம் 5-வது இடத்தில் உள்ளதாக மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் கரோனா இரண்டாவது அலை குறைந்து வரும் நிலையில், ஒரு சில இடங்களில் மீண்டும் தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில், கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவோரில் தமிழகம் 5-வது இடத்தில் உள்ளதாக மத்திய சுகாதாரத் துறை இணை செயலர் லவ் அகர்வால் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக மேலும் அவர் பேசியதாவது, தமிழகம், புதுச்சேரி, கேரளம், கர்நாடகம் உள்ளிட்ட மாநிலங்களில் கரோனா அதிகரித்து வருகிறது.

கேரளத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டு அதிக அளவிலான நபர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். நாடு முழுவதும் 44 மாவட்டங்களில் கரோனா பாதிப்பு விகிதம் 10 சதவிகிதமாக உள்ளது. நாட்டில் கரோனா இரண்டாம் அலை முற்றிலும் குறையவைல்லை என்று கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இணைந்து செயல்படுவதுதான் முன்னேற்றத்துக்கு உறுதுணை: சி.பி. ராதாகிருஷ்ணன்

ஜம்மு - காஷ்மீர்: பாதுகாப்புப் படையின் ‘ஆபரேசன் த்ராஷியில்’ ஜெய்ஷ்-ஏ-முகமது தளபதி பலி!

”Vijay அரசியலுக்கு வருவது அவரின் ஜனநாயக உரிமை, ஆனால்..!” இயக்குநர் Raju Murugan!

Sunil Gavaskar அறிவுரையைக் கேட்பாரா Abhishek Sharma? | T20 World Cup Review

மின்சாரத் தேவையைத் தொடர்ந்து நிலக்கரித் தேவை அதிகரிக்கும்!

SCROLL FOR NEXT