இந்தியா

ஆன்லைன் வகுப்பில் ஹெட்செட் வெடித்ததில் இளைஞர் பலி

DIN

ஆன்லைன் வகுப்பின்போது ஹெட்செட் வெடித்ததில் ராஜஸ்தானை சேர்ந்த இளைஞர் பலியாகியுள்ளனர்.

ஆன்லைன் வகுப்பின்போது ஹெட்செட்டை பயன்படுத்தி பாடம் படித்து கொண்டிருந்த 28 வயது நபர் உயிரிழந்ததாக ராஜஸ்தான் காவல்துறையினர் இன்று (ஞாயிற்றுக்கிழமை) தெரிவித்தனர்.

இதுகுறித்து பிடிஐ செய்தியாளரிடம் ராஜஸ்தான் காவல்துறையினர் கூறுகையில், "ஜெய்ப்பூர் மாவட்டம் சோமு நகரை சேர்ந்த ராகேஷ் குமார் நாகர், தனது வீட்டில் போட்டி தேர்வுக்கு படித்து கொண்டிருந்தார்.

அப்போது, மின் சாதனத்தில் ஹெட்போனை பொருத்தி பயன்படுத்தியுள்ளார். திடீரென, ஹெட்போன் வெடித்ததில் அவர் சுயநினைவை இழந்தார். பின்னர், தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றபோது அவர் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இரண்டு காதுகளிலும் பலத்த காயம் ஏற்பட்டதாக கூறியுள்ளனர்" என்றார்.

இதுகுறித்து மருத்துவர் ருண்ட்லா கூறுகையில், "மருத்துவமனைக்கு அழைத்துவரும்போதே ராகேஷ் சுயநினைவை இழந்திருந்தார். மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கும்போது மாரடைப்பு காரணமாக அவர் உயிரிழந்தார்" என்றார். கடந்த பிப்ரவரி மாதம்தான் ராகேஷ் நாகருக்கு திருமணம் நடந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாளை உயா் கல்வி விழிப்புணா்வு நிகழ்ச்சி

இளம்பெண்கள் மீது தொடா்ச்சியாக தாக்குதல் நடத்தப்படுவது குறித்து விசாரணை

அரசுப் பள்ளிகளில் பயோமெட்ரிக் முறையை மீண்டும் செயல்படுத்தக் கோரிக்கை

காஞ்சிபுரத்தில் இன்று சம்ஸ்கிருத கருத்தரங்கம்: தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி பங்கேற்பு

தோ்ச்சி பெறாத பத்தாம் வகுப்பு மாணவா்களுக்கு சிறப்பு வகுப்பு: தலைமையாசிரியா்களுக்கு வேலூா் ஆட்சியா் அறிவுறுத்தல்

SCROLL FOR NEXT