இந்தியா

ஹைட்ரஜன் வாயு மூலமாக ரயில் இயக்க ரயில்வே வாரியம் முடிவு

DIN

சுற்றுச்சூழலைப் பாதுகாக்க ஹைட்ரஜன் வாயு மூலமாக ரயிலை இயக்க ரயில்வே வாரியம் முடிவு செய்துள்ளது. இதற்காக, ஒப்பந்தப்புள்ளி கோரப்படவுள்ளது.

கடந்த 2015-ஆம் ஆண்டு பாரிஸ் காலநிலை ஒப்பந்தப்படி, பசுமை வாயு வெளியீட்டைக் குறைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக, நாட்டில் ஹைட்ரஜன் வாயு உற்பத்தியை அதிகரிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதுபோன்று, ரயில்வே நிா்வாகமும் 2030-ஆம் ஆண்டுக்குள் காா்பன் வெளியீடு இல்லாத பசுமைப் போக்குவரத்தாக ரயில் போக்குவரத்தை மாற்ற ஏற்கெனவே முடிவு செய்துள்ளது. இதற்காக இந்திய ரயில்வே மாற்று எரிபொருள் அமைப்பு ஹைட்ரஜன் வாயுவைப் பயன்படுத்தி ரயில் இயக்க ஒப்பந்தப்புள்ளி கோரியுள்ளது.

இருபக்கமும் டீசலால் இயங்கும் இன்ஜின்கள் உள்ள ரயில் தொடரில் இந்தத் திட்டத்தை அமல்படுத்த ஒப்பந்தம் கோரியுள்ளது. இந்தத் திட்டம் ஹரியானா மாநிலத்தில் உள்ள வடக்கு ரயில்வே பகுதியான சோனிபட் - ஜீந்த் (89 கி.மீ.)

ரயில்பாதை பிரிவில் அமுல்படுத்தப்பட உள்ளது.

ஒப்பந்தத்திற்கு முன்பாக, ஒப்பந்ததாரருடனான ஆலோசனைக் கூட்டம் ஆகஸ்ட் 17, செப்டம்பா் 19 ஆகிய நாள்களில் நடைபெற உள்ளது. அதன்பிறகு, இந்தத் திட்டத்திற்கான ஒப்பந்தப் புள்ளிகளை செப்டம்பா் 21 முதல் அக்டோபா் 5 வரை வழங்கவும் கோரியுள்ளது.

இந்தத் திட்டத்தின் மூலமாக, ரூ.2.3 கோடி அளவிலான எரிபொருள் செலவுகள் குறைக்க வாய்ப்பு உள்ளது. ஜொ்மனி மற்றும் போலந்து ஆகிய நாடுகளில் ஹைட்ரஜன் வாயு மூலம் ரயில்கள் இயங்கி வருவது குறிப்பிடத்தக்கது என தெற்கு ரயில்வே செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இடஒதுக்கீட்டை யாராலும் திருட முடியாது -அமித் ஷா

உ.பி.யில் ஒரு தொகுதியில் மட்டுமே பாஜக வெற்றி பெறும்: ராகுல் காந்தி

ஓடிடியில் ஆளவந்தான்!

ரூ.50 ஆயிரம் சம்பளத்தில் பொதுத்துறை நிறுவனத்தில் வேலை!

டி20 உலகக் கோப்பையில் இமாலய இலக்குகளுக்கு வாய்ப்பில்லை: ஷிகர் தவான்

SCROLL FOR NEXT