நாடு முழுவதும் 51.90 கோடி கரோனா தடுப்பூசிகள் செலுத்தி புதிய சாதனையை எட்டியுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் புதன்கிழமை தெரிவித்துள்ளது.
மத்திய சுகாதாரத்துறை இன்று அளித்துள்ள தரவுகளின்படி,
நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 41,38,646 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டதையடுத்து, மொத்தம் 51,90,80,524 (இன்று காலை 7 மணிவரை) தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது.
இதையும் படிக்க | ‘அமளியால், இரவு தூக்கம்கூட வரவில்லை’: வெங்கையா நாயுடு வேதனை
வயதுவாரி விவரங்கள்:
18 - 44 வயது | முதல் தவணை - 18,23,88,445 இரண்டாம் தவணை - 1,29,63,932 |
45 - 59 வயது | முதல் தவணை - 11,34,11,880 இரண்டாம் தவணை - 4,35,83,965 |
60 வயதுக்கு மேல் | முதல் தவணை - 7,92,14,965 இரண்டாம் தவணை - 3,90,45,153 |
சுகாதாரத்துறை | முதல் தவணை - 1,03,38,727 இரண்டாம் தவணை - 80,17,291 |
முன்களப் பணியாளர்கள் | முதல் தவணை - 1,82,42,071 இரண்டாம் தவணை - 1,18,74,095 |
மொத்தம் | 51,90,80,524 |