இந்தியா

முன்கூட்டியே முடிக்கப்பட்ட மக்களவை: தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு

DIN

எதிர்க்கட்சிகளின் தொடர் அமளியால் நாடாளுமன்ற செயல்பாடுகள் கடந்த 16 நாள்களாக நீட்டித்த வந்த நிலையில், மக்களவை முன்கூட்டியே முடிக்கப்பட்டது.

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் ஜூலை 19 தொடங்கி நடைபெற்று வந்தன. ஆகஸ்ட் 13 வரை நடைபெறவிருந்த கூட்டம் தொடங்கிய முதல் நாளிலிருந்தே பெகாஸஸ் விவகாரத்தை அவையில் விவாதிக்க கோரி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட தொடங்கினர்.

கடந்த 16 நாள்களும் கூட்டம் தொடங்கியது முதலே பெகாஸஸ், வேளாண், பெட்ரோல் விலை உயர்வு குறித்து விவாதிக்க கோரி அமளியில் ஈடுபட்டதால் தொடர்ந்து ஒத்திவைக்கப்பட்டு வந்தன.

நாடாளுமன்ற பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில், அமளிக்கு நடுவே சில மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டு வந்தன.

இந்நிலையில், கூட்டத்தின் 17வது நாளான இன்று மக்களவை தொடங்கியவுடன், அவையை இரண்டு நாள்களுக்கு முன்னதாகவே முடித்துக் கொள்ளப்படுவதாக கூறி, தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படுவதாக அவைத் தலைவர் ஓம் பிர்லா அறிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மெட்ரோ ரயில் பணி: சென்னையில் போக்குவரத்து மாற்றம்!

விளம்பரப் பலகை விழுந்த விபத்தில் பாலிவுட் நடிகரின் உறவினர்கள் உயிரிழப்பு!

பிளே ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெறுமா ஆர்சிபி?

சுனில் சேத்ரியின் ஓய்வு முடிவு குறித்து பேசிய விராட் கோலி!

உ.பி. முதல்வரின் 'புல்டோசர்' இடஒதுக்கீட்டுக்கு எதிராக உள்ளது: காங்கிரஸ் பதிலடி!

SCROLL FOR NEXT