இந்தியா

ஹிமாச்சல் நிலச்சரிவு: இதுவரை 3 சடலங்கள் மீட்பு

ANI

ஹிமாச்சலப் பிரதேசம் நிலச்சரிவில் சிக்கி மண்ணுக்குள் புதைந்தவர்களில் 3 சடலங்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ளதாக இந்தோ-திபெத் எல்லைப் படையினர் தெரிவித்துள்ளனர்.

கின்னூர் மாவட்டம் ரெகாங் பியோ-சிம்லா நெடுஞ்சாலையில் இன்று (புதன்கிழமை) மதியம் 12:45 மணி அளவில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. அப்போது, அவ்வழியே சென்ற டிரக், அரசு பேருந்து உள்ளிட்ட பல வாகனங்கள் இடிபாடுகளில் சிக்கியது.

இந்நிலையில், மண்ணுக்குள் புதைந்த வாகனங்களில் இருப்பவர்களை மீட்க இந்தோ - திபெத் எல்லை படையினர் சம்பவ இடத்திற்கு வந்து மீட்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், இதுவரை இடிபாடுகளில் சிக்கிய 10 பேரை உயிருடனும், 3 பேரை சடலமாகவும் மீட்டுள்ளதாக இந்தோ-திபெத் படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஊழலை துடைத்தெறிய உறுதி: ஜாா்க்கண்ட் பிரசாரத்தில் பிரதமா் மோடி

பிரஜ்வல் ரேவண்ணா விவகாரம் தெரிந்தும் ஓராண்டாக நடவடிக்கை இல்லை: காங்கிரஸ் மீது நிா்மலா சீதாராமன் குற்றச்சாட்டு

சந்தேஷ்காளி சம்பவம் பாஜகவின் திட்டமிட்ட சதி: திரிணமூல் காங்கிரஸ் குற்றச்சாட்டு

அமெரிக்கா: 17 பேரைக் கொன்ற செவிலிக்கு 760 ஆண்டுகள் சிறை

வெங்காய ஏற்றுமதிக்கான தடை நீக்கம்: மத்திய அரசு நடவடிக்கை

SCROLL FOR NEXT