இந்தியா

யானை, புலிகள் எண்ணிக்கை கணக்கீடு: நெறிமுறைகள் வெளியீடு

DIN

தேசிய அளவில் யானை மற்றும் புலிகளின் எண்ணிக்கையை வரும் 2022-ஆம் ஆண்டு கணக்கிடும்போது பின்பற்றப்பட வேண்டிய நெறிமுறைகளை மத்திய சுற்றுச்சூழல், வனத்துறை அமைச்சா் பூபேந்தா் யாதவ் வியாழக்கிழமை வெளியிட்டாா்.

உலக யானை தினத்தையொட்டி யானைகள் மற்றும் புலிகளின் எண்ணிக்கை மதிப்பீட்டை அமைச்சகம் முதன்முறையாக இணைத்து, அதற்கான நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சியில் பேசிய அமைச்சா் பூபேந்தா் யாதவ், யானைகளை பாதுகாப்பதில் உள்ளூா் மக்களின் பங்களிப்பை வலியுறுத்தியதோடு மனிதா்கள்- யானைகளுக்கு இடையேயான பிரச்சினைகளை குறைக்கும் வகையிலான அணுகுமுறையைப் பின்பற்றுமாறு கேட்டுக்கொண்டாா்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய இணை அமைச்சா் அஸ்வினி குமாா் சௌபே, யானைகளைப் பாதுகாப்பதன் மூலம் காடுகள் பாதுகாக்கப்படுவதாகவும், காடுகள் பாதுகாக்கப்பட்டால் ஒட்டுமொத்த சுற்றுச்சூழலும் பாதுகாக்கப்படும். இயற்கை மற்றும் வன விலங்குகளுடன் இணைந்த வாழ்வை முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்று அவா் கேட்டுக்கொண்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்தியாவின் நிலக்கரி உற்பத்தி 7.4 சதவிகிதம் உயர்வு!

தமிழகத்துக்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கை! | செய்திகள்: சிலவரிகளில் | 02.05.2024

ஜிம் செல்பவரா நீங்கள்.. மாரடைப்பு குறித்து மருத்துவர்கள் எச்சரிக்கை!

சன் ரைசர்ஸ் ஹைதராபாத் பேட்டிங்!

இருதரப்பினரிடையே கடும் மோதல்: கடைகளுக்கு தீ வைப்பு - போலீஸார் குவிப்பு!

SCROLL FOR NEXT