சாதிவாரி கணக்கெடுப்பு அனுமதி: 'பிரதமரை சந்திக்க காத்திருக்கிறேன்'
சாதிவாரி கணக்கெடுப்பு தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க காத்திருப்பதாக பிகார் முதல்வர் நிதீஷ் குமார் தெரிவித்துள்ளார்.
சாதிவாரி கணக்கெடுப்பு தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க காத்திருப்பதாக பிகார் முதல்வர் நிதீஷ் குமார் தெரிவித்துள்ளார்.
பிகார் மாநிலம் பாட்னாவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ''சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதற்கு அனுமதி கோரி பிரதமருக்கு அனுப்பப்பட்ட எனது கடிதம் பெறப்பட்டதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேச வேண்டும். பிரதமர் நேரம் ஒதுக்குவதற்காக காத்திருக்கிறோம்'' என்று கூறினார்.
படிக்க | சாதிச் சான்றிதழ் இல்லாததால் கல்லூரிப் படிப்பைத் தொடர முடியாத பழங்குடியின மாணவி
Advertisement
Advertisement
நாட்டின் நலனுக்காகவே சாதிவாரியாக கணக்கெடுப்பு நடத்தப்படுவதாக கடந்த 9-ம் தேதி பிகார் முதல்வர் நிதீஷ் குமார் தெரிவித்திருந்தார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.