வாஜ்பாய் நினைவு நாள்: ராம்நாத் கோவிந்த், மோடி உள்ளிட்ட தலைவர்கள் மரியாதை 
இந்தியா

வாஜ்பாய் நினைவு நாள்: ராம்நாத் கோவிந்த், மோடி உள்ளிட்ட தலைவர்கள் மரியாதை

முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் 3ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, தில்லியில் அவரது நினைவிடத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர். 

DIN

முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் 3ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி, தில்லியில் அவரது நினைவிடத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.

பிரதமராக பதவியேற்ற முதல் பாஜக தலைவர் என்ற பெருமைக்குரிய வாஜ்பாய், தனது 93 ஆவது வயதில் உடல்நலக் குறைவு காரணமாக கடந்த 2018ஆம் ஆண்டு ஆகஸ்ட் 16-ஆம் தேதி காலமானார்.

தில்லியில் அவர் நினைவாக சதைவ் அடல் என்ற பெயரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நினைவிடம் திறக்கப்பட்டது. 

இந்நிலையில், முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் 3ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி, தில்லியில் அவரது நினைவிடத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி ஆகியோர் மரியாதை செலுத்தினர்.

இதேபோல் குடியரசு துணைத் தலைவர் வெங்யைய நாயுடு, மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்டோரும் மரியாதை செலுத்தினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சோளிங்கரில் கேட்பாரற்று கிடந்த குழந்தை மீட்பு

மாநகராட்சிப் பகுதியில் குவிந்துள்ள குப்பைகளால் நோய் பரவும் அபாயம்

அரசுப் பேருந்து, காா்களை சேதப்படுத்தியதாக 7 போ் கைது

ஜி.கே. உலகப் பள்ளியில் பேட்மிண்டன் அகாதெமி திறப்பு

வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்: மேற்கு வங்கத்தில் மேலும் இருவா் தற்கொலை

SCROLL FOR NEXT