கேரளம் : ஐ.எஸ் தீவிரவாத அமைப்பிற்கு ஆதரவு கொடுத்த 2 பெண்கள் கைது 
இந்தியா

கேரளம் : ஐ.எஸ் தீவிரவாத அமைப்பிற்கு ஆதரவு கொடுத்த 2 பெண்கள் கைது

கேரள மாநிலம் கன்னூரில்  ஐ.எஸ் தீவிரவாதச் செயல்பாடுகளுக்கு ஆதரவு கொடுத்த இரண்டு பெண்களை  தேசிய புலனாய்வுத் துறை கைது செய்திருக்கிறார்கள்.

DIN

கேரள மாநிலம் கன்னூரில்  ஐ.எஸ் தீவிரவாதச் செயல்பாடுகளுக்கு ஆதரவு கொடுத்த இரண்டு பெண்களை  தேசிய புலனாய்வுத் துறை கைது செய்திருக்கிறார்கள்.

இன்று ( செவ்வாய்க்கிழமை) காலை 6 மணி அளவில் ஷீபா ஹாரிஸ் மற்றும் மிசா சித்திக்  இருவரையும் அவரவர் வீடுகளில் வைத்து  கைது செய்த பின்  இணைய வாயிலாக நீதிபதி முன் ஆஜர் படுத்தப்பட்டனர்.

சில நாட்களுக்கு முன் இவர்களின் கூட்டாளியான அன்வர் கைது செய்யப்பட்ட தகவலை ஐ.எஸ் அமைப்பிற்கு தெரியப்படுத்த முயன்றதிற்காக இருவரும் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள் என்கிற தகவல் வெளியானதால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது. 

மேலும் புலனாய்வுத் துறை அவர்களை தில்லி அழைத்துச் சென்று விசாரணையை மேற்கொள்ள  இருக்கிறார்கள்.

இந்நிலையில் பத்திரிக்கையாளர்கள்  அப்பெண்களின் உறவினர்களிடம் விசாரித்தபோது அவர்கள் பதில் சொல்ல  மறுத்துவிட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அபிராமி கல்லூரி மாணவிகளுக்கு பாராட்டு

780 கிலோ கஞ்சா தீவைத்து அழிப்பு

ரூ.1.2 கோடி ஒதுக்கியும் 9 மாதங்களாக கிடப்பில் நூம்பல் சாலைப் பணிகள்

‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்: மகளிருக்கு கடனுதவி

விடுதியில் காதலி தூக்கிட்டு உயிரிழப்பு: வீட்டில் காதலன் தற்கொலை

SCROLL FOR NEXT