இந்தியா

மேக்கேதாட்டு விவகாரம்: நீர்வளத் துறை அமைச்சருடன் பொம்மை பேச்சு

DIN


தில்லியில் நீர்வளத் துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்தை கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை சந்தித்து பேசினார். 

இந்த சந்திப்பின்போது மேக்கேதாட்டு அணை கட்டுவது தொடர்பாக இருவரும் பேசியதாகத் தெரிகிறது. அவருடன் மாநில நீர்வளத் துறை அமைச்சர் கோவிந்த் எம்.கர்ஜோல் உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.

இந்த சந்திப்பதற்கு முன் ஆற்றுநீா்ப் பங்கீடு தொடா்பாக மாநில தலைமை வழக்குரைஞா் பிரபுலிங் நவட்கி தலைமையிலான வழக்குரைஞா்கள் குழுவுடன் ஆலோசனை நடத்தினார்.

இதற்கு அடுத்தபடியாக மத்திய நிதித் துறை அமைச்சா் நிா்மலா சீதாராமன், மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங், மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் மன்சுக் மாண்டவியா, மத்திய வேளாண் துறை அமைச்சா் நரேந்திர சிங் தோமா் உள்ளிட்டோரையும் சந்திப்பதற்கு நேரம் ஒதுக்கித் தரப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நடிகர் விஜய்யின் நிஜ வாழ்க்கை சம்பவம் ‘ஸ்டார்’ படத்துக்கு உத்வேகம்!

சட்டப் படிப்புகளுக்கு மே 10 முதல் விண்ணப்பிக்கலாம்

ரிங்கு சிங் மனம் தளரக் கூடாது: சௌரவ் கங்குலி

சீன நெடுஞ்சாலை உடைப்பு: துரிதமாக செயல்பட்ட டிரக் ஓட்டுநருக்கு பாராட்டு

இந்தியன் - 2 வெளியீட்டில் மாற்றம்?

SCROLL FOR NEXT