இந்தியா

மத்திய அரசின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்: 2 ஆண்டில் 8.30 லட்சம் பேருக்கு சிகிச்சை

மத்திய அரசின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் கடந்த 2 ஆண்டுகளில் 8.30 லட்சம் பேர் சிகிச்சை பெற்றுள்ளதாக புதன்கிழமை மாநிலங்களவையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

DIN

மத்திய அரசின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் கடந்த 2 ஆண்டுகளில் 8.30 லட்சம் பேர் சிகிச்சை பெற்றுள்ளதாக புதன்கிழமை மாநிலங்களவையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2018ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் மருத்துவக் காப்பீடு திட்டத்தின்கீழ், நாட்டில் 50 கோடி பேருக்கு ஆண்டுதோறும் ரூ.5 லட்சம் வரை மருத்துவ சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இந்நிலையில், நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரில் மத்திய அரசின் மருத்துவக் காப்பீட்டு திட்டத்தின்கீழ் பயனடைந்தோர் விவரம் குறித்த கேள்வி எழுப்பப்பட்டது.

இந்த கேள்விக்கு பதிலளித்த மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சர் பாரதி பிரவின் பவார் கூறியது:

மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் மருத்துவக் காப்பீடு திட்டத்தின்கீழ் சுமார் 8.30 லட்சம் பேர் கடந்த 2 ஆண்டுகளில் சிகிச்சைப் பெற்றுள்ளனர். இந்த எண்ணிக்கையானது, தேசிய சுகாதார ஆணையம் மற்றும் மாநில அரசுகள் வழங்கிய தரவுகளின் அடிப்படையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தொழிலாளி வீட்டில் 28 பவுன் நகை, ரூ.50,000 திருட்டு

தற்காலிக நீதிபதிகள் நியமனம்: 9 மாதங்களாக பரிந்துரைகளை அனுப்பாத உயா்நீதிமன்றங்கள்!

பள்ளி மாணவா்களுக்கு குடை

கடையின் பூட்டை உடைத்து ரூ. 5 லட்சம் மதிப்பிலான பொருள்கள் திருட்டு

மன்னாா்குடியில் புதிய பேருந்து நிலையம் திறப்பு

SCROLL FOR NEXT