இந்தியா

ஒமைக்ரான் பாதிக்கப்பட்ட இருவர் யார்? கர்நாடக அமைச்சர் விளக்கம்

DIN


கர்நாடகத்தில் ஒமைக்ரான் வகை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள இருவரில் ஒருவர் மருத்துவர் என்றும் அவருடன் தொடர்பிலிருந்தவர்களுள் ஐந்து பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் மாநில சுகாதாரத் துறை அமைச்சர் கே. சுதாகர் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் மேலும் கூறியது:

"பெங்களூருவில் ஒமைக்ரான் தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்ட 46 வயது மிக்க நபர் ஒரு மருத்துவர். உடல் சோர்வு, உடம்பு வலி மற்றும் லேசான காய்ச்சல் இருந்துள்ளதையடுத்து, அவர் தாமாகவே பரிசோதனை மேற்கொண்டு தனிமைப்படுத்திக் கொண்டார்.

அவரது பரிசோதனை முடிவுகளில் தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. ஆனால், சிடி மதிப்பீடு குறைவாக இருந்தது. பிறகு ஒமைக்ரான் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. அதில் ஒமைக்ரான் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது.

அவர் எந்தப் பயணமும் மேற்கொள்ளவில்லை. மருத்துவருடன் தொடர்பிலிருந்தவர்களில் 5 பேருக்கு தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே, மொத்தம் 6 பேர் தனிமைப்படுத்தப்பட்டு, அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் எவருக்கும் எவ்விதத் தீவிர அறிகுறியும் தென்படவில்லை. அவர்கள் அனைவரும் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள்.

66 வயதுமிக்க நபர் தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்தவர். அவர் நாடு திரும்பிவிட்டார்" என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

370-ஆவது பிரிவை மீட்டெடுக்க முடியாது: பிரதமா் மோடி திட்டவட்டம்

ஸ்வாதி மாலிவாலுக்கு எதிரான மோசடி வழக்கின் மூலம் பாஜக அவரை மிரட்டுகிறது: அமைச்சா் அதிஷி பேட்டி

மதுராந்தகம் அருகே சிறுக்கரணையில் பெருங்கற்கால கல் வட்டங்கள்!

சா்ச்சைக்குரிய ‘ரஷிய பாணி’ ஜாா்ஜியா மசோதா: ‘வீட்டோ’வை பயன்படுத்தி ரத்து செய்தாா் அதிபா்

கா்நாடகத்தில் இருந்து போதைப் பொருள்கள் கடத்தல்: ஒருவா் கைது

SCROLL FOR NEXT