விபின் ராவத் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளாரா?
ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய முப்படைகளின் தலைமை தளபதி விபின் ராவத் சிகிச்சைக்காக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளதாகத் தகவல் கிடைத்திருக்கிறது என கர்நாடக முதல்வர் பொம்மை தெரிவித்துள்ளார்.
ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய முப்படைகளின் தலைமை தளபதி விபின் ராவத் சிகிச்சைக்காக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளதாகத் தகவல் கிடைத்திருக்கிறது என கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.
முப்படைகளின் தலைமை தளபதி விபின் ராவத் பயணித்த ஹெலிகாப்டர் குன்னூர் அருகே புதன்கிழமை விபத்துக்குள்ளானது. விபத்தில் சிக்கிய விபின் ராவத்தின் நிலை என்ன என்பது இன்னும் அதிகாரப்பூர்வமாகத் தெரியவில்லை.
இதையும் படிக்க | ஹெலிகாப்டர் விபத்து நடந்தது எப்படி?
விபத்துக்குள்ளான இடத்தில் 10 பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக நீலகிரி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை இதுபற்றி கூறியது:
"முப்படைகளின் தலைமை தளபதி விபின் ராவத் பயணித்த இந்திய விமானப் படை ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான செய்தி வருத்தமளிக்கிறது. இந்த சம்பவம் குறித்து மேற்கொண்டு தகவல்களைச் சேகரிக்க முயற்சித்து வருகிறேன். முதற்கட்ட தகவல்களின்படி, சிகிச்சைக்காக அவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளார்."