முகப்பு
இந்தியா

நாட்டில் புதிதாக 8,503 பேருக்கு கரோனா; 624 பேர் பலி

நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 8,503 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது. 

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:40 AM
நாட்டில் புதிதாக 8,439 பேருக்கு கரோனா
பகிர்:


புது தில்லி: நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 8,503 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது. 

கரோனா பாதிப்பு குறித்து மத்திய சுகாதாரத் துறை வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில், நாடு முழுவதும் இதுவரை 65.32 கோடி கரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளது.

நாட்டில் தற்போது கரோனா பாதித்து சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 94,943 ஆக அதிகரித்துள்ளது.

அதுபோல, கடந்த 24 மணி நேரத்தில் 7,678 பேர் கரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர். கரோனாவுக்கு 624 பேர் பலியானதையடுத்து மொத்தம் எண்ணிக்கை 4,74,735ஆக அதிகரித்துள்ளது. 

நாட்டில் இதுவரை 131.18 கோடி கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 

முழு கட்டுரையைப் படிக்க →