விபின் ராவத் 
இந்தியா

உத்தரகண்ட்: பல்கலைக்கழகத்திற்கு விபின் ராவத்தின் பெயரைச் சூட்ட முடிவு

மறைந்த முப்படைத் தலைமை தளபதி விபின் ராவத்தின் பெயரை உத்தரகண்ட் மாநிலத்தில் புதிதாகக் கட்டப்பட்டு வரும் பல்கலைக்கழகத்திற்கு சூட்ட முடிவு செய்யப்பட்டிருக்கிறது.

DIN

மறைந்த முப்படைத் தலைமை தளபதி விபின் ராவத்தின் பெயரை உத்தரகண்ட் மாநிலத்தில் புதிதாகக் கட்டப்பட்டு வரும் பல்கலைக்கழகத்திற்கு சூட்ட முடிவு செய்யப்பட்டிருக்கிறது.

முப்படைத் தலைமை தளபதி விபின் ராவத் மற்றும் அவர் மனைவி உள்பட 13 பேர் ஹெலிகாப்டர் விபத்தில் கடந்த புதன்கிழமை உயிரிழந்தனர். 

அவருடைய மறைவுக்கு  அரசியல் கட்சித் தலைவர்கள் , முன்னாள் அதிகாரிகள் என பலர் இரங்கல் தெரித்து வருகிறார்கள்.

இந்த நிலையில், அவர் பிறந்த மாநிலமான உத்தரகண்டில் புதிதாக கட்டப்பட்டு வரும் சமஸ்கிருத பல்கலைக்கழகத்திற்கு அவருடைய பெயரை சூட்ட வேண்டும் என தேவப்பிரயாகை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வினோத் கண்டூரி நேற்று சட்டமன்றத்தில் தெரிவித்தார்.

இன்று அதனை அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் ஆதரித்து ஏற்றுக்கொண்டதால் விபின் ராவத்தின் பெயரை பல்கலைக்கழகத்திற்கு சூட்ட அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மேட்டூர் அணை நிலவரம்!

ஜக்தீப் தன்கர் எங்கே? அமித் ஷாவுக்கு சஞ்சய் ரௌத் கடிதம்

ஜம்மு-ஸ்ரீநகர் நெடுஞ்சாலையில் விபத்து: 2 போலீஸ் அதிகாரிகள் பலி

சென்னையில் தக்காளி விலை தொடர்ந்து உயர்வு

நடுவானில் தொழில்நுட்பக்கோளாறு - சென்னையில் ஏர் இந்தியா விமானம் அவசர தரையிறக்கம்

SCROLL FOR NEXT