இந்தியா

தேர்தல்களில் பாஜக தோற்கடிக்கப்படும்: அகிலேஷ் யாதவ்

PTI


ரே பரேலி: லக்கிம்பூர் கேரி வன்முறையை, ஜாலியன்வாலாபாக் படுகொலையுடன் ஒப்பிட்டுப் பேசியிருக்கும் சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், பிரிட்டீஷார் கூட முன்னாலிருந்துதான் சுட்டனர், ஆனால் பாஜக, பின்னாலிருந்து ஜீப்பை ஏற்றிக் கொன்றது என்று கூறியுள்ளார்.

சமாஜ்வாதி வெற்றி யாத்திரையின் ஒரு பகுதியாக, ரே பரேலி சென்றிருக்கும் அகிலேஷ் யாதவ், வரும் 2022ஆம் ஆண்டு உத்தரப்பிரதேச பேரவைத் தேர்தலில் பாஜக தோற்கடிக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.

செய்தியாளர்களிடம் பேசிய அகிலேஷ் யாதவ், உத்தரப்பிரதேசத்தில் விவசாயிகள் மீது ஜீப்பை ஏற்றி படுகொலை நடந்துள்ளது. ஒரு முறை வரலாற்றைத் திருப்பிப் பார்த்தால், நமக்கு ஜாலியன்வாலாபாக் படுகொலை நினைவுக்கு வரும், அப்போது, முன்னால் நின்றுகொண்டு, பிரிட்டீஷார் மக்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டுக் கொன்றனர். 

ஆனால், பாஜகவோ, விவசாயிகளின் பின்னாலிருந்து ஜீப்பை மோதவிட்டுள்ளது. இந்தக் குற்றச்செயலில் ஈடுபட்ட நபர் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் குற்றம்சாட்டியுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மொரீஷியஸில் இளையராஜா: வைரல் புகைப்படம்!

உருவகேலி செய்யாதீர்கள்: 2 ஆண்டுகளாக நோயுடன் போராடும் மலையாள நடிகை!

இடுக்கி நீர்மட்டம் 35% ஆக குறைவு! வறட்சியின் விளிம்பில்...

ரூ.4 கோடி பறிமுதல்: நயினார் நாகேந்திரனின் உறவினர் உள்பட 2 பேர் விசாரணைக்கு ஆஜர்!

இயக்குநருடன் வாக்குவாதம்.. படப்பிடிப்பை நிறுத்திய சௌந்தர்யா ரஜினிகாந்த்?

SCROLL FOR NEXT