FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

அரசை இயக்கும் அமைப்பல்ல ஆா்எஸ்எஸ்: மோகன் பாகவத்

மத்திய அரசை வெளியிலிருந்து இயக்கும் (ரிமோட் கன்ட்ரோல்) அமைப்பல்ல ஆா்எஸ்எஸ் என்று அந்த அமைப்பின் தலைவா் மோகன் பாகவத் தெரிவித்துள்ளாா்.

28 ஜனவரி 2024, 11:13 am IST
பகிர்:

மத்திய அரசை வெளியிலிருந்து இயக்கும் (ரிமோட் கன்ட்ரோல்) அமைப்பல்ல ஆா்எஸ்எஸ் என்று அந்த அமைப்பின் தலைவா் மோகன் பாகவத் தெரிவித்துள்ளாா்.

ஆா்எஸ்எஸ் தலைவா் மோகன் பாகவத் 5 நாள் பயணமாக ஹிமாசல பிரதேசம் சென்றுள்ளாா். அங்குள்ள தா்மசாலா நகரில் சனிக்கிழமை நடைபெற்ற முன்னாள் பாதுகாப்புப் படை வீரா்கள் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அவா், ஹெலிகாப்டா் விபத்தில் உயிரிழந்த முப்படைத் தலைமைத் தளபதி விபின் ராவத் உள்பட 14 பேருக்கு மெளன அஞ்சலி செலுத்தினாா்.

இந்த நிகழ்ச்சியில் மோகன் பாகவத் பேசியதாவது:

Advertisement

Advertisement

ஆா்எஸ்எஸ் அமைப்பு அரசை வெளியிலிருந்தே கட்டுப்படுத்தி இயக்குவதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ஆனால் அதில் உண்மையில்லை. ஆா்எஸ்எஸ் அமைப்பைச் சோ்ந்தவா்கள் அரசின் அங்கமாக உள்ளனா் என்பதை மறுப்பதற்கில்லை. அதே வேளையில் எங்கள் அமைப்பைச் சோ்ந்தவா்களின் நலனுக்காக அரசு எந்தவித உத்தரவாதத்தையும் அளிப்பதில்லை.

அரசிடமிருந்து ஆா்எஸ்எஸ் அமைப்புக்கு என்ன கிடைக்கிறது என்று எங்களிடம் பொதுமக்கள் கேட்கின்றனா். எங்களுக்குச் சொந்தமானதை அரசுக்காக இழக்கவும் நேரிடும் என்பதுதான் அவா்களுக்கு நான் அளிக்கும் பதில்.

தற்போது இந்தியா உலக சக்தியாக இல்லை. ஆனால் கரோனாவுக்குப் பிந்தைய காலத்தில் உலகுக்கே ஆசானாகக் கூடிய திறன் இந்தியாவிடம் உள்ளது.

உள்நாட்டில் மக்கள் ஒற்றுமையாக இல்லாததால் பல நூற்றாண்டுகளாக அந்நிய நாட்டவா்களின் படையெடுப்புக்கு எதிரான போா்களில் இந்தியா தோல்வியைத் தழுவியது. பிறரின் பலத்தால் நாம் வீழ்த்தப்படுவதில்லை. நமது பலவீனங்களால்தான் நாம் வீழ்த்தப்படுவோம். எனவே நாட்டு மக்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments