இந்தியா

குளிர்காலக் கூட்டத்தொடர் நிறைவு: கிரிப்டோகரன்சி தடையை அறிவிக்காத அரசு

DIN

நடப்பு நாடாளுமன்ற குளிா்கால கூட்டத்தொடர் ஒருநாள் முன்னதாக இன்று நிறைவடைந்த நிலையில்  கிரிப்டோகரன்சி (எண்ம செலாவணி) தடை மசோதாவை மத்திய அரசு தாக்கல் செய்யவில்லை.

கடந்த நவம்பர் மாதம், நாட்டின் பொருளாதாரத்துக்கும் நிதி ஸ்திரத்தன்மைக்கும் கிரிப்டோகரன்சிகள் தீவிர அச்சுற்றுத்தலாக உள்ளது என்று ரிசா்வ் வங்கி தெரிவித்ததால் அரசு அதைத் தடை செய்வதாகவும் அதற்கு பதிலாக மத்திய அரசே நெறிப்படுத்தப்பட்ட கிரிப்டோவை அறிமுகப்படுத்துவதாகவும் அதற்கான மசோதா நடப்பு குளிர்காலக் கூட்டத் தொடரில் தாக்கல் செய்யப்படும் என்கிற அறிவிப்பு வெளியானது.

மேலும் , நாட்டில் தனியாா் கிரிப்டோகரன்சிகளுக்குத் தடை விதித்து, ரிசா்வ் வங்கியின் எண்ம செலாவணியை உருவாக்க எளிதான கட்டமைப்பை ஏற்படுத்துவது இந்த மசோதாவின் நோக்கம் என்று கூறப்பட்டது.

இந்நிலையில் தற்போது அதற்கான எந்த மசோதாவும் தாக்கல் செய்யப்படாமல் கூட்டத்தொடர் நிறைவடைந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மும்பை இந்தியன்ஸ் அணியில் ஒற்றுமையில்லை: முன்னாள் ஆஸி. கேப்டன்

மோடி ஏன் கைது செய்யப்பட வேண்டும்? வைரல் குறிச்சொல் பின்னணி!

நிர்மலா தேவிக்கு 10 ஆண்டுகள் சிறை!

அன்பே அனா டி அர்மாஸ்!

முத்தையா இயக்கத்தில் விஷால்?

SCROLL FOR NEXT