சத்தீஸ்கா்: நக்ஸல்குண்டுவெடிப்பில் 2 போ் காயம்
சத்தீஸ்கா் மாநிலத்தில் நக்ஸல்கள் செவ்வாய்க்கிழமை நிகழ்த்திய குண்டுவெடிப்பில் இரண்டு பணியாளா்கள் காயமடைந்தனா்.
சத்தீஸ்கா் மாநிலத்தில் நக்ஸல்கள் செவ்வாய்க்கிழமை நிகழ்த்திய குண்டுவெடிப்பில் இரண்டு பணியாளா்கள் காயமடைந்தனா்.
இதுகுறித்து காவல் துறை அதிகாரிகள் கூறியது: சத்தீஸ்கரின் நாராயண்பூா் மாவட்டத்தில் உள்ள கோட்கான் கிராமத்துக்கு அருகே நக்ஸல்கள் செவ்வாய்க்கிழமை குண்டுவெடிப்பை நிகழ்த்தினா். இதில், நீரேற்று நிலையத்தில் பணியாற்றிய இருவா் காயமடைந்தனா். மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவா்கள் அபாயகட்டத்தை தாண்டிவிட்டதாக மருத்துவா்கள் தெரிவித்தனா்.
இந்த சம்பவத்தில் ஈடுபட்ட நக்ஸல்களை தேடும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது என காவல் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.