திரிணமூல் எம்.பி. தினேஷ் திரிவேதி பதவி விலகல்
மாநிலங்களவை உறுப்பினர் பதவியை திரிணமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த தினேஷ் திரிவேதி ராஜினாமா செய்துள்ளார்.
மாநிலங்களவை உறுப்பினர் பதவியை திரிணமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த தினேஷ் திரிவேதி ராஜினாமா செய்துள்ளார்.
மேற்கு வங்கத்தில் நடக்கும் வன்முறை மிகவும் வேதனை அளிப்பதால் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை துறப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
மாநிலத்தின் வளர்ச்சிக்காக தமது பதவியை ராஜிநாமா செய்வதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மேற்கு வங்கத்தில் கடந்த சில நாள்களாக திரிணமூல் மற்றும் பாஜக தொண்டர்கள் மத்தியில் மோதல் போக்கு நீடித்து வருகிறது.
காங்கிரஸ் மற்றும் இடதுசாரி கட்சிகள் வேலைவாய்ப்பு மற்றும் தொழிற்சாலைகளை உருவாக்கக் கோரி நேற்று தலைமைச் செயலகத்தை நோக்கி நடத்திய பேரணியில் வன்முறை வெடித்தது.
அதனைத் தொடர்ந்து மேற்கு வங்கத்தில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.