84 ஆயிரம் பேருக்கு இன்று 2-ம் கட்ட கரோனா தடுப்பூசி: சுகாதாரத்துறை
நாடு முழுவதும் இன்று இரண்டாம் கட்ட கரோனா தடுப்பூசி தொடங்கப்பட்டுள்ள நிலையில், ஒரே நாளில் 84 ஆயிரம் கரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் இன்று இரண்டாம் கட்ட கரோனா தடுப்பூசி தொடங்கப்பட்டுள்ள நிலையில், ஒரே நாளில் 84 ஆயிரம் கரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் கரோனா தடுப்பூசி போடும் பணிகள் கடந்த ஜனவரி மாதம் முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இரண்டு கட்டங்களாக கரோனா தடுப்பூசி போடப்படுகிறது.
முதல் கட்ட கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட பிறகு 28 நாள்கள் கழித்து இரண்டாம் கட்ட கரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
Advertisement
இந்நிலையில் இன்றிலிருந்து (பிப்.13) இரண்டாம் கட்ட கரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கியுள்ளது. அதன்படி இன்று மாலை 6 மணி வரை 84 ஆயிரம் பேருக்கு இரண்டாம் கட்ட தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.