ராஜஸ்தானில் 25 வயது பெண் சகோதரரால் வெட்டிக் கொலை
ராஜஸ்தானின் ஹனுமன்கர் மாவட்டத்தில் 25 வயது பெண் ஒருவர் தனது சகோதரரால் வெட்டிக் கொல்லப்பட்டதாக காவல்துறையினர் திங்கள்கிழமை தெரிவித்தனர்.
ஜெய்ப்பூர்: ராஜஸ்தானின் ஹனுமன்கர் மாவட்டத்தில் 25 வயது பெண் ஒருவர் தனது சகோதரரால் வெட்டிக் கொல்லப்பட்டதாக காவல்துறையினர் திங்கள்கிழமை தெரிவித்தனர்.
பிலிபங்கா காவல் நிலைய எல்லைக்குள்பட்ட படோபால் கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு இந்திராவுக்கும் அவரது சகோதரர் ககன் சிங்கிற்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாதம் முற்றியதில் கோபத்துடன் தனது தங்கையைக் கோடாரியால் கோபத்துடன் தாக்கியுள்ளார். இதில் இந்திரா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் பிரேதப் பரிசோதனைக்குப் பின்னர், சடலத்தை குடும்ப உறுப்பினர்களிடம் ஒப்படைக்கப்பட்டதாகத் தெரிவித்தார்.
உயிரிழந்த பெண்ணின் தந்தை தனது மகன் மீது வழக்குப் பதிவு செய்துள்ளார். மேலும் இது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகத் தெரிவித்தனர்.